Friday, February 18, 2022

சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூவகை அலுவல் : அர்ச். தாமஸ் அக்வீனாஸ்

 கிறீஸ்துமஸ் தினத்திற்கான பிரசங்கம் 

சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூவகை அலுவல் : அர்ச். தாமஸ் அக்வீனாஸ்

"அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது" (அரு. 1:4) அர்ச். அருளப்பர் தமது சுவிசே ஷத்தில், குழந்தையாகப் பிறந்தவரான திவ்ய சேசுநாதரை, வார்த்தையானவர் என்று அழைக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தார் (ஒளியும் ஜீவனுமாக இருந்தார்): அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது" இதிலிருந்து, ஆண்டவருடைய மனிதவதாரமானது, மனித ருக்கு மூன்று மடங்கான நன்மைகளை அளிக்கின்றது என்று நாம் அறியலாம்:


1.முதலாவதாக, மனுவுருவான திவ்ய சேசுநாதர்சுவாமி மனிதருக்கு போதிக்கும் வார்த்தையா னவராக விளங்கினார்-"சேசுநாதர், கலிலேயாநாடெங்கும் சுற்றிப்போய், போதித்து, சுவிசேஷத் தைப் பிரசங்கித்தார்” (மத். 4:23); 

ஆண்டவர் மூன்று காரியங்களை நமக்கு போதித்தார் : 

1) உலகிலுள்ள சகல காரியங்களின் தன்மைகளைப் பற்றி விளக்கும் இயற்பியலை கற்பித்தார்: ஆண்டவர், உலகின் மாயத்தன்மையைப் பற்றியும், பசாசின் தீமையைப் பற்றியும், சர்வேசுர னின் வேதசத்தியத்தைப் பற்றியும் போதித்த போது, உலகிலுள்ள சகலத்தினுடைய பண்பு கள் பற்றியே நமக்குக் கற்பித்துள்ளார். 

2) பரிசுத்த வேதாகமத்தினுடைய வேதசாத்தியங்களை போதித்த போது, ஆண்டவர், நமக்கு, உண்மையானதை நிரூபிக்கக்கூடிய காரணகாரியத்திற்கான தருக்கமுறையைகற்பித்தார்: "அப்பொழுது, வேத வாக்கியங்களை உணர்ந்து கொள்ளும் படியாக, அவர்களுடைய புத்தி யைத் தெளிவித்தார்" (லூக். 24:45) 

3)ஜீவியத்தின் பரிசுத்தத்தனத்தைப் பற்றி நமக்கு போதித்தபோது, ஆண்டவர், நல்ல பழக்க வழக்கங்களின் நன்னெறி ஒழுக்கவியலை நமக்குக் கற்பித்தார்: "சாந்த குணமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், தூய இருதயமுடையவர்கள் பாக்கியவான் கள்" (மத்.5:3-12)"நீங்கள் என்னை குருவென்றும், ஆண்டவரென்றும் அழைக்கிறீர்கள்; நீங்கள் சொல்வது சரியே. ஏனெனில், நான் அவர் தான்” (அரு.13:13) || 


இரண்டாவதாக, மனிதரை ஒளிர்விக்கும் ஒளியாக, திவ்ய சேசு விளங்குகிறார். நம் திவ்ய இரட்சகர் மூன்று வழிகளில், நம்மை ஒளிர்விக்கின்றார்: 

1) பாவத்தின் இரவை அகற்றியதன் மூலம் நம்மை ஒளிர்வித்தார். 

2) வரப்பிரசாதத்தின் நாளைக் கொண்டு வந்ததன் மூலம் நம்மை ஒளிர்வித்தார். "இரவு ஏற்கனவே சென்று போயிற்று; பகலோ சமீபமாயிற்று" (ரோமர் 13:13) 

3) உலகின் இருளை அகற்றும்படியாக, அர்ச்சிஷ்டவர்கள் என்னும் மாபெரும் ஒளிரும் விளக் குகளை, உலகம் முழுவதும் பரவச்செய்தார் - " கோணலும் மாறுபாடுள்ளதுமான ஜனத்தின் நடுவில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும், சர்வேசுரனுடைய நேர்மையான பிள்ளைகளாகவும், மாசற்றவர்களாகவும் இருப்பீர்கள்.. நீங்கள் அவர்கள் நடுவிலே, ஜீவ வாக்கியத்தைக் கையி லேந்திக் கொண்டு, உலகத்தில் சுடர்களைப்போல் பிரகாசிப்பீர்கள்" (பிலிப். 2:15-16) III. 


மூன்றாவதாக, நித்திய ஜீவியத்தை , திவ்ய சேசுநாதர் நமக்கு அருளினார்: 

1) திவ்ய இரட்சகர், தமது மகிமைமிக்க உத்தானத்தால், பாவத்தளையினின்று நம்மை விடு வித்து, நம் ஜீவியத்தை சீர்படுத்தி, செப்பனிட்டு, உயர்த்தினார்"உத்தானமும் உயிரும் நானே" (அரு. 11:25) 2) 

2) நாம் உத்தம் கிறீஸ்துவர்களாக ஜீவிப்பதற்காக, தேவவரப்பிரசாதத்தை, நமது ஜீவியத்திற்கு அருளிச்செய்தார். ஏனெனில், நான் உயிரோடிருக்கிறேன். நீங்களும் உயிரோடிருப்பீர்கள்' (அரு. 14:19) 3) 

3) மகிமையினுடைய ஜீவியத்தை ஆண்டவர் நமக்கு அருளினார். "நான் அவைகளுக்கு நித்திய ஜீவியத்தைக் கொடுக்கிறேன்" (அரு. 10:28)


மூன்று ஞானிகளும் அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகளும்

 மூன்று இராஜாக்கள் திருநாளுக்கான பிரசங்கம் மூன்று ஞானிகளும் அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகளும்

அர்ச். தாமஸ் அக்வீனாஸ் "தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னும், தூபவர்க்கமும், மீறையும் அவருக்குப் பாதகாணிக்கை வைத்தார்கள்" (மத்.2:11) இவ்வேதாகம் வாக்கியத்தை வாசிக்கும் போது, முதலாவதாக, மூன்று ஞானிகள் பற்றியும், இரண்டாவதாக, நமதாண்டவருக்கு, அவர்கள் ஒப்புக்கொடுத்த அவர்களுடைய காணிக் கைகள் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 1. இந்தக் காணிக்கைப் பொருட்களை, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த மூன்று அரசர்களும், ஞானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இன்றைய சுவிசேஷமானது, அவர்கள் பல வகை களிலும், ஞானமுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள் என்று நமக்கு உணர்த்துவதையே, நாம் முதல் முக்கிய கருத்தாகக் கொள்ள வேண்டும். யூதருடைய இராஜாவாகப்பிறந்திருக்கிறவர் எங்கே? என்று அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து, தர்க்க சாஸ்திரத்தில், அவர்கள் கொண் டிருந்த ஆழ்ந்த அறிவை கண்டுணரலாம். கீழ்த்திசையில், அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரை ஆராதிக்க வந்தோம் என்று கூறியதிலிருந்து, நட்சத்திரங்கள் பற்றிய அறிவில், அதாவது, வானசாஸ்திரத்தில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் அறியலாம். கணித சாஸ்திரத்திலும் அவர்கள் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தனர்; முதன்மையான தேவவரப் பிரசாதங்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காண்பிக்கும்படியாக, மூன்று காணிக்கைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஆண்டவருக்குப் பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர்.

கணித சாஸ்திரிகளான அவர்கள், அர்ச். தமதிரித்துவத்தைக் குறிக்கும் எண், மூன்றினு டைய மதிப்பை நன்கறிந்திருந்தனர். இசையின் முக்கியத்துவத்தையும் அறிந்திருந்தனர். இசை, தேவதோத்திரமாக இருப்பதாலும், ஆராதனையில், தேவ தோத்திரம் செலுத்தப்படுவ தாலும், மூன்று ஞானிகளும் தேவபாலனை ஆராதித்தார்கள். ஒழுக்கவியலில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்ததால், எவ்வாறு ஒருவன் தன்னையே தாழ்த்துவது என்பதை அறிந்திருப் பது, உண்மையிலேயே , நல்லொழுக்க அறிவாகும் என்பதால், கீழ்த்திசை இராஜாக்கள் மூவரும், சாஷ்டாங்கமாக, தேவபாலன் முன்பாக தென்டனிட்டு விழுந்து, அவரை ஆராதித்தனர். சர்வத்துக்கும் ஆதிமுதல் காரணராயிருக்கின்ற சர்வாதி கர்த்தராகிய சர்வே சுரனைப்பற்றி, அவர்கள் கொண்டிருந்த அறிவின் மூலமாக, நுண்பொருள் கோட்பாட்டியல் (Metaphysics) பற்றியும் அறிந்திருந்தனர். சர்வேசுரனுடைய தேவ இலட்சணங்கள் பற்றிய மூன்று காரியங்களை, அறிந்திருப்பதை, மூன்று ஞானிகளும், தாங்கள் ஒப்புக்கொடுத்த காணிக் கைப்பொருட்கள் வழியாக வெளிப்படுத்தினர்.

இரண்டாவதாக, அவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருட்கள் பற்றி பார்ப் போம். ஞானிகள், பிறக்கப்போகும் குழந்தை, முதலில், ஆதிகாரணர், அதாவது, சகலத்தை யும் சிருஷ்டித்த சிருஷ்டிகர் என்பதையும், இரண்டாவதாக தேவபாலன், சகலத்தையும் ஆண்டு நடத்துபவர் என்பதையும், மூன்றாவதாக, அவர் சகலத்தையும் புதுப்பிக்கிறவர் என்ப தையும் அறிந்திருந்தனர். அதிகாரத்தையும் வல்லமையையும் அடையாளமாக சுட்டிக்காண்பிக்கும், பொன்னைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததன் மூலம், தேவபாலன், சகலத்தினு டையவும் சிருஷ்டிகர் என்று, ஞானிகள் அறிவித்தனர். பொன், சர்வத்துக்கும் அதிபதியான அரச அதிகார வல்லமையின் முத்திரையாக திகழ்கிறது.

1) பொன் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

நமதாண்டவரது சிருஷ்டிக்கும் வல்லமையானது மூன்று விதமாகக் காண்பிக்கப்பட்டது.

முதலாவதாக, அவர் சிருஷ்டித்த விதத்தில், அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமையானது, வெளிப்படுத்தப்பட்டது: "அவர் வாக்கிடவே சகலமும் செய்யப்பட்டது" (சங்.32:9).

இரண்டாவதாக, சர்வேசுரன், உண்டாக்கியவற்றிலிருந்து, அவருடைய சிருஷ்டிக்கும் வல்ல மை வெளிப்பட்டது: "ஆண்டவருடைய கிரியைகள் மகத்தானவை ; அவற்றில் இன்பம் கொள்வோர் அவற்றை உய்த்துணர்வர்” (சங். 110:2).

மூன்றாவதாக, திவ்ய கர்த்தர், ஒன்றுமில் லாமையிலிருந்து சகலத்தையும் படைத்ததால், அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமை நமக்கு உணர்த்தப்படுகின்றது: "ஆதியிலே கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத் தார். பூமியோவெனில் உருவமற்றதும் வெறுமையுற்றதுமாயிருந்தது" (ஆதி. 1:1,2). 2)

மீரை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

மீரையை தேவபாலனுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததன் மூலமாக, ஆண்டவர் சகல காரியங்களையும் பாதுகாத்து ஆண்டு நடத்துபவர் என்பதை ஏற்று, உலகிற்கு அறிவிக்கின்ற னர்; ஏனெனில், மீரையானது, மாபெரும் பதப்படுத்தும் பொருள்; மற்ற பொருட்களை அழியா மல் பாதுகாக்கும் குணமுடையது. நமதாண்டவர், மூன்று விதமாக உலகத்தை ஆள்கின்றார்:

முதலாவதாக, பிரபஞ்சத்தின் சகலத்தையும் பாதுகாப்பதன் வழியாக, அதை ஆளுகின்றார். "சகலருக்கும் பொறுத்தலளிக்கிறீர்; ஏனெனில், ஆத்துமங்களை நேசிக்கும் கர்த்தாவே! சகல மும் உமக்கு சொந்தமாயிருக்கின்றன” (ஞான 11:27)

இரண்டாவதாக, உலகில் சகல உயிர்வாழ் பிராணிகளுக்கும் உணவளித்துப் பாதுகாத்து வரு வதன் மூலம், உலகத்தை சர்வேசுரன் ஆள்கின்றார்:"மாமிச தேகமுள்ள யாவருக்கும் ஆகாரம் கொடுத்தருளினார்" (சங். 135:25)

மூன்றாவதாக, ஒவ்வொரு மனிதனையும் போஷித்துப் பராமரித்துவருவதன்வழியாக, ஆண்ட வர் உலகத்தை ஆண்டு நடத்துகின்றார்: “தங்கள் தானியம் திராட்சப் பழம் எண்ணெய் இவைகளின் பலனால் அவர்கள் திருப்தியடைந்தார்கள்" (சங்.4:7) 3)

தூபம் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

தூபத்தை, தேவபாலனுக்குக் காணிக்கை யாக ஒப்புக்கொடுத்ததன் மூலமாக, ஞானிகள், ஆண்டவரை, சகலத்தையும் புதுப்பிக்கிற வர் என்பதை, அறிவிக்கின்றனர். தூபமானது சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கப் பட்டு வந் தது. ஆனால், அகில உலகத்தினுடைய பாவ நிவாரண பலியாக, கிறீஸ்துநாதர், சிலுவையில் தம்மையே சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தார். என் விண்ணப்பம் தீபதூபமாகவும். உமது சமூகத்தில் ஏறக்கடவது” (சங். 140:2). தூபத்தின் நறுமண சாம்பிராணிப் புகையானது, மூன்று காரியங்களை செய்கிறது.

முதலாவதாக, அது பசாசை ஓட்டுகிறது. மீனுடைய இருதயத்தின் ஒரு துண்டை நெருப்பில் போட்டால், அதிலிருந்து கிளம்பும் புகையானது, ஆண், பெண் அனைவரிடமும் உள்ள எவ்விதப் பேய்களையும் ஓட்டிவிடும். இனிமேல், அவை கிட்ட வராது' (தொபி.6:8).

இரண்டாவதாக, அது பாவிகளைத் தூய்மைப்படுத்துகிறது: "இவர் நம்மை சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவினார்" (காட்சி 1:5)

மூன்றாவதாக, அது உலகத்தை சர்வேசுரனுடன் ஒப்புரவாக்குகின்றது. "கிறீஸ்துநாதர் நமக்காகத் தம்மைச் சர்வேசுரனுக்குப் பரிமள வாசனையுள்ள காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்” (எபேசி 5:2)

Friday, December 24, 2021

நமதாண்டவரின் திவ்யபிறப்பு திருநாளின் திருவிழிப்பிற்கான ஞானதியான பிரசங்கம்: அர்ச்.பெர்னார்ட்.

 


சுபாவத்திற்கு மேற்பட்டதும் சுபாவத்திற்காகவும், தன்னிகரற்ற உமது அற்புதத்தால் சுபாவத்தைக் கடந்ததும், ஆனால் அதே நேரத்தில் சுபாவத்தை உமது தேவஇரகசியத்தால் பரிகரிப்பதற்காகவும், நிகழ்ந்த ஓ அற்புத பிறப்பே! சர்வேசுரனின் குமாரன் பிறந்துள்ளார்: மகத்தானவற்றை ஆசிப்பவன் பேருவுவகை கொள்ளட்டும். ஏனெனில் மாபெரும் நற்கொடைகளை அளிப்பவர் இதோ வருகிறார்! சகோதரரே! இதோ எல்லாவற்றிற்கும் உரிமையாளர்0 இவ்வாறு, அவருடைய உரிமைச்சொத்தை நாமும் பெறும்படியாக, நாம் அவரை பக்திபற்றுதலுடன் வரவேற்போம். “நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் அவரோடு நமக்கு தானம் பண்ணாதிருப்பதெப்படி?” (ரோமர்.8:32). 

யூதாவின் பெத்லகேமில் சேசுகிறிஸ்து பிறந்தார். எளிய மக்களாகிய நம்மேல் கொண்ட அவருடைய அளவற்ற இரக்கத்தைப் பாருங்கள்! ராஜநகரமான ஜெருசலேமில் அல்ல அவர் பிறந்தது. மாறாக, யூதாவிலேயே தாழ்ந்த நகரமான பெத்லகேமில் பிறந்தார். ஓ சிறிய பெத்லகமே! இப்பொழுது உன்னை ஆண்டவர் மாபெரும் நகரமாக மாற்றினார்! மிகப்பெரியவரான சர்வேசுரன் உன்னிடத்தில் மிகச்சிறியவராக வந்ததால், உன்னை மிகப்பெரியதாக மாற்றினார். பெத்லகமே! களிகூர்வாயாக! உனது எல்லா தெருக்களிலும் திருவிழாவின் அல்லேலூயா கிதம் பாடப்படட்டும். அந்த மாபெரும் விலைமதிப்பில்லாத மாட்டுத் தொழுவத்தையும் திவ்யபாலன் படுத்துறங்கிய முன்னிட்டியையும்பற்றி கேள்வியுறும் மற்றெந்த நகரம் தான் உன்னைப் பார்த்து பொறாமைப்படாமல் இருக்கும்? இதிலிருந்து நாம் அறியவேண்டியது, பெத்லகேமில் பிறப்பதற்கு திருவுளமான திவ்ய கர்த்தர் எவ்வாறு அவரை நாம் வரவேற்கிறதை விரும்புகிறார் என்பதேயாம். அரசமாளிகையில், அரசருக்கெல்லாம் அரசருக்குரிய அரண்மனை மாளிகையில் அவர் மகிமையுடன் வரவேற்கப்படுவதையா அவர் விரும்பினார்? அல்லவே. இவற்றையெல்லாம் தேடி பரலோக சிம்மாசனத்திலிருந்து அவர் கீழே இறங்கி பூமிக்கு வரவில்லை. மோட்சத்தில், நித்தியத்திற்குமாக அவையெல்லாம், ஏராளமாக உள்ளன. 


ஆனால்மோட்சத்தில் “தரித்திரம்” என்ற ஒன்றுதான் காணக்கிடைக்காததாக இருக்கிறது. பூமியிலோ, இது அதிகமாக,மிக அதிகமாக உள்ளது. மனிதர் இதன் விலைமதிப்பை அறியாதிருக்கின்றனர். இதனை ஆசித்து, அதைத் தமக்கே உரியதாக்கிக் கொள்ளவும், நம் அனைவருக்குமாக அதை விலையுயர்ந்ததாக்கும் படியாக, சர்வேசுரனின் திவ்யகுமாரன் பூவுலகிற்கு இறங்கி வந்தார். பூமியில் இருக்கும் சகல மனுமக்களே! புழுதியில் இருக்கும் நீங்கள் கேளுங்கள். உங்களையே உலுக்கிக் கொள்ளுங்கள். ஆண்டவரைப் பற்றி புகழ்ச்சி கீதங்கள் பாடுங்கள். இதோ! நோயாளிகளைச் சந்திக்க மருத்துவர் வருகின்றார்! அடிமைகளை மிட்பதற்கு இரட்சகர் வருகின்றார். தவறுபவர்களுக்கு நேரான பாதையைக் காண்பிக்கவும், இறந்தவர்களுக்கு ஜீவியத்தை அருளும்படியாகவும், வருகிறார். ஏனெனில் நமது பாவங்களை யெல்லாம், ஆழ்கடலில் எறிவதற்காக நம்மிடம் வருகிறார். அவர் நமது நோய்களை குணப்படுத்துவார். நம்மை அவரது தோள்களிலே சுமந்து தமது மகத்துவமிக்க அரியாசணைக்கு இட்டுச் செல்வார். அது மாபெரும் வல்லமை வாய்ந்ததாக திகழும். அதைவிட ஆச்சரியமிக்க விதத்தில் நமது மேல் அவர் கொண்டிருக்கும் எல்லையில்லா இரக்கமே, நமக்குத் துணை புரியும்படி அவரை நம்மைத் தேடி வரச் செய்தது.

ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட அதிபிரகாசமான அந்த நாளிலிருந்து விரட்டப்பட்டான். இக்குறுகிய இடத்தில் அடைபட்டான்0 இந்த இருண்டுபோன நாளுக்குள் வந்தான்.ஏனெனில் அவனுக்குள் இருந்த சத்தியத்தின் ஒளி அணைந்துபோனது. அந்த இருளான நாளில் தான் நாம் அனைவரும் பிறந்தோம். ஆயினும் சர்வேசுரனுடைய இரக்கமே, அணையாத ஒரு சிறு ஒளித்துகளை நமக்குள் விட்டு வைத்தது. சத்தியத்தின் ஒளியை அடைய விரும்பும் அனைவரையும் நீதியின் சு+ரியனான சர்வேசுரனுடைய ஏக குமாரனே, மாபெரும் ஒளியுடைய மெழுகுவிளக்கு போல தம்மிடம் அழைக்கின்றார். அவரை அணுகிச்செல்வோர் அனைவரும் அவருடன், விளக்கில் நெருப்பும் ஒளியும் இணைந்திருப்பதுபோல ஒன்றிணைவர். எனவே, நாம் இவ்வுலகைவிட்டுப் பிரியும்போது நித்திய இருளுக்கு செல்லாதபடி, இந்த மகத்துவமிக்கதும் பிரகாசமிக்கதுமான நட்சத்திரத்தினின்று புறப்படும் சத்தியத்தின் அறியவியலுக்கான ஒளியினால் நம்மை ஒளிர வைத்துக்கொள்வோம். சர்வேசுரன், உங்களை குணமாக்கும்படியாக அர்ச்.கன்னிமாமரி வழியாக கிறிஸ்துவை உங்களுக்கு அளித்தார். அதில், கடவுளும் மனிதனும் சேர்ந்த ஒரு கலவை மருந்து, அதாவது உங்களுடைய குற்றங்குறைகளைத் திர்ப்பதற்கான மாற்றுமருந்து உள்ளது. கட்டிட வேலைக்கு உலக்கையால் கலந்து செய்யப்படும், காரைச்சாந்து போல, அர்ச்.கன்னிமாமரியின் திருவுதரத்தில், கடவுள், மனிதன் என்னும் இரு வஸ்துக்களும் திவ்ய இஸ்பிரித்துவானவரால் கலக்கப்பட்டு தேவ மனித சுபாவம் உருவானது. கிறிஸ்துவைப் பெற உங்களுக்கு தகுதியில்லையாதலால், தேவமாதா மூலமாகவே நிங்கள் மோட்சத்திலிருந்து பெற விரும்பும் அனைத்தையும் அடையும்பொருட்டு, கிறிஸ்துவானவர் அர்ச். கன்னிமாமரியிடம் கொடுக்கப்பட்டார். மாதாவே, உங்கள் அனைவருக்காகவும் சர்வேசுரனையே திவ்ய மகனாகப் பெற்றெடுத்தார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த தாயாக விளங்கும் தேவமாதாவிடம் நமக்குத் தேவையான பாவத்திற்கான மாற்றுமருந்தைக் கண்டடைகின்றோம். நித்தியத்திற்கும் பரிசுத்த கன்னிகையாக விளங்கும் தேவமாதாவிடம் நமக்கு தேவையான சகாயங்களை அடைகின்றோம். ஏனெனில், தேவமாதாவின் பரிசுத்த கரங்களின் வழியாக மட்டுமே அனைத்தும் மனுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படியாக சர்வேசுரன் திருவுளம் கொண்டுள்ளார்.

இன்று உங்களை பரிசுத்தப்படுத்தும்படியாக உங்களை ஆயத்தப்படுத்துங்கள். அப்பொழுது, நாளைக்கு, உங்களுக்குள் சர்வேசுரனுடைய மகத்துவமிக்க வல்லமை விளங்குவதை நிங்கள் காண்பீர்கள். மனித நாவால் விவரிக்கமுடியாத தேவஇரகசியமான நமது நேச ஆண்டவரின் திவ்யபிறப்பைக் கொண்டாடும் இவ்வேளையில், அன்பார்ந்த சகோதரரே! நம்மை அதற்குத் தகுந்தபடி எல்லாவிதத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ளும்படி, நாம் மெய்யாகவே இப்பொழுது எச்சரிக்கப்படுகின்றோம். ஏனெனில் பரிசுத்தருக்கெல்லாம் பரிசுத்தா; இங்கு இருக்கின்றார். “நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தராகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (லேவி 19:2) என்று இங்கு விற்றிருக்கும் நம் ஆண்டவர் நம்மிடம் கூறுகின்றார். ஏனென்றால், பரிசுத்தமானதை நாய்களுக்கும், முத்துக்களை பன்றிகளுக்கும் போடாதபடிக்கு, இப்பரிசுத்த ஸ்தலத்திற்கு வருமுன் முதலில், நிங்கள், உங்களுடைய பாவங்களிலிருந்தும் அநீத இன்பங்களினின்றும் நிங்கி பரிசுத்தமாக வேண்டும்.


சகோதரர்களே! நாம் இதற்காகத் தான் ஜீவிக்கின்றோம். இதற்காகத் தான் இவ்வுலகில் பிறந்தோம். இதற்காகத் தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதற்காகத் தான் நமக்காக, இந்த நாள் இப்பொழுது தோன்றியுள்ளது. இருளடைந்த இரவாகவே ஒரு காலம் இருந்தது. அப்போது, யாரும் இந்த அலுவலை செய்யக் கூடாமலிருந்தனர். சத்தியத்தின் ஒளி தோன்றிய கிறிஸ்துவின் திவ்ய பிறப்பிற்கு முன்வரைக்கும் இந்த உலகம் முழுவதும் இரவின் இருளில் நிலைத்திருந்தது. “மனந்திரும்புதல்”; என்னும் நமது “அந்தரங்க மறுபிறப்பு” ஏற்படும் வரைக்கும் நாம் ஒவ்வொருவரும் இரவின் இருளிலேயே நிலைத்திருந்தோம்.

எனவே, இன்று, நம்மை அர்ச்சித்துக்கொள்வோம். மெய்யாகவே, இரவின் தூக்க மயக்கத்திலிருந்து எழுந்து, தெளிவடைவதற்காக நம்மையே உலுக்கிக்கொள்வோம். ஏனெனில் நாளைக்கு அர்ச்சிப்பிற்கான ஆயத்தம் செய்வதற்காக நேரம் நமக்கு கொடுக்கப்படாது. ஏனெனில், நாளைக்கு “உங்களுக்குள் தேவமகத்துவத்தைக் காண்பீர்கள்”; என்பதற்கேற்ப, இன்று நிதி விதைக்கப்படுகின்றது. நாளைக்கு அதற்கான திர்ப்பைப் பெறுவோம். பரிசுத்த உத்தமதனத்தை இதுவரைக்கும் வெறுத்துவந்த மனிதனால் தேவமகத்துவத்தைக் காணமுடியாது. அவனால் மகிமையின் சு+ரியன், தன் மேல் உதயமாவதை இன்றும் காணமுடியாது. நாளையும் காணமுடியாது. ஏனென்றால் அவன்மேல் நிதியின் சு+ரியனானவர் எழுந்தருளமாட்டார். இன்று நமக்கு நிதியின் பிதாவாக விளங்கும் சர்வேசுரன், நாமும் அவருடன் நித்தியமகிமையில் தோன்றும்படியாக, நாளைக்கு நமது உயிரளிக்கும் நித்திய ஜீவியமாக நம்முன் தோன்றுவார். “சேசுகிறிஸ்து, சர்வேசுரனின் திவ்யகுமாரன் யூதாவின் பெத்லகேமில் பிறந்தார்” என்ற பரிபூரணமான தேவவரப்பரசாதத்தைக் கொண்டதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான வார்த்தையைக் கேட்டோம். ஆனால், பக்தியற்றவர்களும், நன்றிகெட்டவர்களும், கெட்ட கிறிஸ்துவர்களும் இதைப்பற்றி, “இது ஒன்றும் புதிதல்ல. வெகுகாலத்திற்கு முன்பே இதை அறிவோம். வெகு நீண்ட காலத்திற்கு முன்பே கிறிஸ்து பிறந்தார்” என்று பேசாதிருப்பார்களாக! ஏனெனில், கிறிஸ்து, “நம்முடைய இக்காலங்களுக்கெல்லாம் முன்னரே பிறந்தார்” என்பதற்கு பதிலாக “எல்லா காலத்திற்கும் முன்னதாக பிறந்தார்” என்று நான் கூறுகின்றேன்.

ஆனால் திவ்ய கர்த்தரின் அந்த திவ்ய பிறப்பு இருளை தனது மறைவிடமாகக் கொண்டிருந்தது. அல்லது, நம்மால் காணக்கூடாத ஒளியினுள் குடியிருந்தது. பிதாவின் இருதயத்தினுள் அது மறைந்திருந்தது. தாம் ஓரளவிற்கு அறியப்படும்படியாக அவர் உலகிற்கு வந்து பிறந்தார். காலம் நிறைவுற்றபோது, அவர் மாமிசமெடுத்து பிறந்தார். எனவே, ஆத்துமங்களை எப்பொழுதும் புதுப்பிக்கும் ஆண்டவருடைய திவ்ய பிறப்பு, எப்பொழுதும் புதியதாகவே திகழ்கிறது. அது ஒருபோதும், பலனளிக்காத, உதிர்ந்துபோன பழைமையான நிகழ்வு அல்ல. நமது நேச ஆண்டவரின் திவ்ய பிறப்பு, பரிசுத்தமாக அழியாததாக, நம்மைப் பரிசுத்தர்களாக்குவதற்காக, நித்திய காலத்திற்குமாக நிலைத்திருக்கும். †

Thursday, December 23, 2021

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் தயாரித்த முதல் கிறிஸ்துமஸ் குடில்



அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் இறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு, திவ்ய குழந்தை சேசுவின் உன்னத பிறப்பின் திருநாளை மகா பக்திபற்றுதலுடன் கொண்டாடுவதற்காக கிரேஷியோ நகர மக்களுக்கு உதவும்பொருட்டு, மிக ஆடம்பரமாக கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட ஏற்பாடு செய்ய முற்பட்டார். தான் கைக்கொள்ளும் இப்புதிய பக்தி முயற்சிக்காக தான் குற்றம் சாட்டப்படாமலிருக்கும்படியாக அதற்கான அங்கிகாரத்தை ரோமுக்கு சென்று பரிசுத்த பாப்பரசரிடம் பெற்று வந்தார். அதன்பிறகு பிரான்சிஸ் ஒரு குடிலை அமைத்தார். வைக்கோலையும் ஒரு எருதையும் ஒரு கழுதையையும் குடில் அமைக்கப்பட்ட இடத்திற்குக் கொண்டுவந்தார். தன் சபையின் துறவற சகோதரர்களையும் அந்நகர மக்களையும் அங்கு வருமாறு அழைத்தார்.

அந்தக் குடில் அமைக்கப்பட்ட காட்டை நோக்கி மக்கள் ஓடி வந்தனர். காடுமுழுவதும் அவர்களுடைய குரலொலிகளால் நிறைந்தது. அந்த வணக்கத்துக்குரிய இரவானது பல பிரகாசமான விளக்குகளால் ஒளிர்விக்கப்பட்டது0 கணீரென்ற குரலொலிகளால் தேவதோத்திர புகழ்ச்சி சங்கீதங்கள் பாடப்பட்டன. சர்வேசுரனுடைய மனிதர் குடிலுக்கு முன்பாக பக்தி பற்றுதலால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டவராகவும் கண்ணிரால் முழுதும் நனைந்தவராகவும் பரலோக மகிழ்ச்சியால் ஒளிருகின்றவராகவும் நின்று கொண்டிருந்தார்.

அந்த குடிலுக்கு முன்பாக பல திவ்ய பலிபூசைகள் நிறைவேற்றப்பட்டன. கிறிஸ்துவின் லேவியரான பிரான்சிஸ் பரிசுத்த சுவிசேஷத்தைப் பாடினார். ஏழ்மைவேடம் பூண்டு பிறந்த பிரபஞ்சத்தின் அரசரான திவ்ய கர்த்தரின் பிறப்பைப் பற்றி அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் பிரான்சிஸ் பிரசங்கம் நிகழ்த்தினார். 

ஆண்டவருடைய திவ்ய திரு நாமத்தை அவருடைய மிகுந்த கனிந்த தேவசிநேகத்தினால் உச்சரிக்கமுடியாதவராக, பெத்லகேமின் திவ்ய குழந்தை என்றே அழைக்கலானார். கிரேஷியோ நகரின் பிரசத்திபெற்ற மிகுந்த துணிவுள்ள ஒரு வீரர், கிரேஷியோவின் ஜான் எனபவர் அர்ச்சிஷ்டவரால் கவரப்பட்டு பிரான்சிஸின் சபைச் சிடரானவர், அவரால் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்டவர்,  அப்போது அங்கிருந்தார். குடிலில் மெய்யாகவே மாட்சிமிகுந்தும் பேரெழிலுடனும் திவ்ய குழந்தை சேசுநாதர்சுவாமி உயிருடன் தூங்கிக் கொண்டிருப்பதையும், திவ்ய குழந்தை சேசுவை தூக்கத்திலிருந்து விழிக்கவைக்கும்படியாக பரிசுத்த தந்தை பிரான்சிஸ், தனது இருகரங்களாலும் அரவணைப்பதையும் இந்த சிடர் காட்சியில் கண்டார். இது மெய்யாகவே நிகழ்ந்த ஒரு நிகழ்வாகும். 

ஏனெனில் இதன் பிறகு அந்த குடிலிலிருந்த வைக்கோலினால் எண்ணற்ற புதுமைகள் நிகழந்தன. அந்நகர மக்கள் அந்த வைக்கோலை பாதுகாத்து வந்தனர். வியாதியுற்றிருந்த கால்நடைகள் அவ்வைக்கோல் தொடப்பட்டதால் புதுமையாக குணமடைந்தன. அந்த வைக்கோல் தொடப்பட்டு அவ்வு+ர் மக்கள் பல கொள்ளை நோய்களிலிருந்து அற்புதமாக காப்பாற்றப்பட்டனர்.

Saturday, December 18, 2021

கிறீஸ்துமஸ் திருநாள் - சங். மூ.னி. நிக்கோலாஸ் சுவாமி.

 கிறீஸ்துமஸ் திருநாள்

சங். மூ.னி. நிக்கோலாஸ் சுவாமி.


""நீர் ஒரு குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்'' (லூக்.1:31) என கன்னிமாமரியிடம்  சம்மனசு  அறிவித்தார்.  சேசு  என்றால் இரட்சகர் எனப் பொருள்.

""இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய  இரட்சகர்  உங்களுக்காகப்  பிறந்திருக்கிறார்''  என  இடையர்களுக்கு  ஒரு தேவதூதன் அறிவித்தார் (லூக்.2:11).

கீழ்த்திசை  சோதிட  சாஸ்திரிகளுக்குத்  தோன்றிய  நட்சத்திரம்  சேசு  அனைவருக்கும்  இரட்சகர்  எனக்  காட்டிற்று.  இந்த  இரட்சிப்பானது  மனித  சந்ததிக்கு  ஒரு  நல்ல  செய்தியாகும்;  இந்த  நல்ல  செய்தியோ  பெரும்  மகிழ்ச்சியின்  ஊற்று.  ""இதோ  எல்லா ஜனங்களுக்கும் மகா சந்தோ­த்தை வருவிக் கும்  சுபசெய்தியை  உங்களுக்கு  அறிவிக்கிறேன்'' என்று இடையர்களுக்குத் தேவ தூதன் அறிவித்தார்  (லூக்.2:10).

இடையர்கள் போய் சேசுவைக் கண்டார்கள். அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு பிரகாசமும் மகிழ்ச்சியும் கிடைத்தன. யார் யார் சேசுவை ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் ஒளியும் சந்தோ­மும் அடைவார்கள். பெத்லகேம் மக்களோ சேசுவை அலட்சியம் செய்து விட்டார்கள்.

கீழ்த்திசையிலிருந்து வந்த அறிஞர்கள் சேசுவை ஏற்றுக்கொண்டனர். அவர்களும் மகிழ்ச்சியும்  ஒளியும்  பெற்றனர்.  எருசலேம்  நகர்  குருக்களோ,  போய்  சேசுவைப்  பார்க்க  விரும்பவில்லை. சேசு தனக்குப் போட்டியாக வருவார் என அஞ்சி ஏரோது அவரைக் கொல்ல விரும்பினான்.

சாதாரண  மக்களும்,  அறிஞர்களும்,  ஏழைகளும்,  செல்வந்தரும்  சேசுவைப்  பார்க்கப்  போனார்கள்; தம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் சேசு நேசிக்கிறார்.  யூதர்களும் புற  ஜாதியாரும் சேசுவிடம் போனார்கள். சேசு அனைவருக்கும் இரட்சகர் கர்த்தர் பிறந்த திருநாளன்று குருக்கள் மூன்று பூசைகள் நிறைவேற்றுகின்றனர். 

முதற்பூசை சுவிசே­த்தில் சொல்லப்பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் சேசு பிறந்ததை நினைவூட்டுகிறது. 

இரண்டாவது பூசை, இடையர்கள் சேசுவை ஆராதித்ததையும், ஆத்துமங்களில் சேசு பிறப்பதை யும்  காட்டுகிறது.  

சேசு  கடவுளாகிய  மட்டும்  நித்தியத்திலிருந்தே  இருக்கிறார்  எனக்  காட்ட, ""ஆதியலே வார்த்தையானவர் இருந்தார்'' என்றும், சேசு மனிதனாகிய மட்டும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்தார் என்று காட்ட, ""வார்த்தையானவர் மாமிசமானார்'' என்றும், சேசு ஞான விதமாய்  ஆத்துமங்களில்  பிறக்கிறார்  என்று  காட்ட,  ""யார்  யார்  அரை  ஏற்றுக்கொண்டார் களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்'' என்றும் மூன்றாம் பூசையில் வாசிக்கிறோம். சேசு பிறந்த வரலாற்றையும், கர்த்தர் பிறந்த திருநாளுக்குரிய 

வரப்பிரசாதத்தில் நாம் வாழ வேண்டும் என்பதையும் மூன்று பூசைகளும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.  அந்த வரப்பிரசாதம் நாம் சிறுவர்களைப் போல மாசற்றவர்களாய் வாழ்வதே. 

""நீங்கள் சிறுவர்களைப் போல் ஆகாவிட்டால் பரலோக இராச்சியத்தில்  பிரவேசிக்க மாட்டீர்கள்.''

சேசு தம்மை சாஸ்திரிகளுக்குக் காண்பித்ததை ஜனவரி 6-ம் நாளன்று நாம் கொண்டாடுகிறோம்.  இந்த சாஸ்திரிகள்  புறஜாதியார் அனைவரையும்  குறிக்கிறார்கள்.  சகல ஜாதி ஜனங்களும்  இரட்சகரிடம் வருவார்கள்  என்பதை  இசையாஸ் தீர்க்கதரிசியும்  தாவீதரசரும் முன்னறிவித்திருக்கிறார்கள்.

அர்ச்.  பிரான்சிஸ்  அசிசியார்,  கர்த்தர்  பிறந்த  திருநாளுக்கு  விசே­  சிறப்புக்கொடுத்தார். முதற்குடிலை ஜோடிக்கத் தொடங்கியவர் அவர் என்று சொல்லலாம்.

கர்த்தர்  பிறந்த  திருநாளன்று  பிறருக்கு  நம்மால்  முடிந்ததை  நாம்  கொடுக்க  வேண்டும். பெற்றுக்கொள்வதை விடக் கொடுப்பதே சிறந்தது. பெற்றுக் கொள்வதற்கு ஒரு காலம் உண்டு, என்றாலும்  கர்த்தர்  பிறந்த  திருநாளை யொட்டி  நாம்  பிறருக்குக்  கொடுத்து  அவர்களை மகிழ்விக்க  வேண்டும்.  சேசு  தம்மை  இடையர்களுக்கும்,  அறிஞர்களுக்கும்  கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

நம்  இருதயங்கள்  உயிருள்ள  குடில்களாக  வேண்டும்;  அந்தக்  குடில்களில்  சேசுவை ஏற்றுக்கொள்ள  அவற்றைத்  தயாரிக்கும்படி  நல்ல  பாவசங்கீர்த்தனம்  செய்ய  வேண்டும். பாவமோ,  பாவத்தின்மேல்  பற்றுதலோ  நம்  இருதயத்தில்  இருக்கலாகாது.  அப்படியானால் திவ்ய நற்கருணை வழியாக நம் இருதயத்தில் நாம் ஏற்றுக்கொள்ளும் சேசு நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவார்.

Wednesday, June 8, 2016

Download Christian Mp3 Songs

You can download free Catholic Songs here.  Now a days all the songs of Roman Catholic Christians are like Cinema song or Protestant or CSI songs.  So I have created this
blog for the reason to provide good Catholic old songs for the people.

Now you cannot get this songs any where.  Because all the Diocesan Shops are selling only songs like Protestant or CSI.  You can hear only music from the songs.  But you cannot understand the words or no meaning in the songs.