Friday, February 18, 2022

சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூவகை அலுவல் : அர்ச். தாமஸ் அக்வீனாஸ்

 கிறீஸ்துமஸ் தினத்திற்கான பிரசங்கம் 

சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூவகை அலுவல் : அர்ச். தாமஸ் அக்வீனாஸ்

"அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது" (அரு. 1:4) அர்ச். அருளப்பர் தமது சுவிசே ஷத்தில், குழந்தையாகப் பிறந்தவரான திவ்ய சேசுநாதரை, வார்த்தையானவர் என்று அழைக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தார் (ஒளியும் ஜீவனுமாக இருந்தார்): அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது" இதிலிருந்து, ஆண்டவருடைய மனிதவதாரமானது, மனித ருக்கு மூன்று மடங்கான நன்மைகளை அளிக்கின்றது என்று நாம் அறியலாம்:


1.முதலாவதாக, மனுவுருவான திவ்ய சேசுநாதர்சுவாமி மனிதருக்கு போதிக்கும் வார்த்தையா னவராக விளங்கினார்-"சேசுநாதர், கலிலேயாநாடெங்கும் சுற்றிப்போய், போதித்து, சுவிசேஷத் தைப் பிரசங்கித்தார்” (மத். 4:23); 

ஆண்டவர் மூன்று காரியங்களை நமக்கு போதித்தார் : 

1) உலகிலுள்ள சகல காரியங்களின் தன்மைகளைப் பற்றி விளக்கும் இயற்பியலை கற்பித்தார்: ஆண்டவர், உலகின் மாயத்தன்மையைப் பற்றியும், பசாசின் தீமையைப் பற்றியும், சர்வேசுர னின் வேதசத்தியத்தைப் பற்றியும் போதித்த போது, உலகிலுள்ள சகலத்தினுடைய பண்பு கள் பற்றியே நமக்குக் கற்பித்துள்ளார். 

2) பரிசுத்த வேதாகமத்தினுடைய வேதசாத்தியங்களை போதித்த போது, ஆண்டவர், நமக்கு, உண்மையானதை நிரூபிக்கக்கூடிய காரணகாரியத்திற்கான தருக்கமுறையைகற்பித்தார்: "அப்பொழுது, வேத வாக்கியங்களை உணர்ந்து கொள்ளும் படியாக, அவர்களுடைய புத்தி யைத் தெளிவித்தார்" (லூக். 24:45) 

3)ஜீவியத்தின் பரிசுத்தத்தனத்தைப் பற்றி நமக்கு போதித்தபோது, ஆண்டவர், நல்ல பழக்க வழக்கங்களின் நன்னெறி ஒழுக்கவியலை நமக்குக் கற்பித்தார்: "சாந்த குணமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், தூய இருதயமுடையவர்கள் பாக்கியவான் கள்" (மத்.5:3-12)"நீங்கள் என்னை குருவென்றும், ஆண்டவரென்றும் அழைக்கிறீர்கள்; நீங்கள் சொல்வது சரியே. ஏனெனில், நான் அவர் தான்” (அரு.13:13) || 


இரண்டாவதாக, மனிதரை ஒளிர்விக்கும் ஒளியாக, திவ்ய சேசு விளங்குகிறார். நம் திவ்ய இரட்சகர் மூன்று வழிகளில், நம்மை ஒளிர்விக்கின்றார்: 

1) பாவத்தின் இரவை அகற்றியதன் மூலம் நம்மை ஒளிர்வித்தார். 

2) வரப்பிரசாதத்தின் நாளைக் கொண்டு வந்ததன் மூலம் நம்மை ஒளிர்வித்தார். "இரவு ஏற்கனவே சென்று போயிற்று; பகலோ சமீபமாயிற்று" (ரோமர் 13:13) 

3) உலகின் இருளை அகற்றும்படியாக, அர்ச்சிஷ்டவர்கள் என்னும் மாபெரும் ஒளிரும் விளக் குகளை, உலகம் முழுவதும் பரவச்செய்தார் - " கோணலும் மாறுபாடுள்ளதுமான ஜனத்தின் நடுவில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும், சர்வேசுரனுடைய நேர்மையான பிள்ளைகளாகவும், மாசற்றவர்களாகவும் இருப்பீர்கள்.. நீங்கள் அவர்கள் நடுவிலே, ஜீவ வாக்கியத்தைக் கையி லேந்திக் கொண்டு, உலகத்தில் சுடர்களைப்போல் பிரகாசிப்பீர்கள்" (பிலிப். 2:15-16) III. 


மூன்றாவதாக, நித்திய ஜீவியத்தை , திவ்ய சேசுநாதர் நமக்கு அருளினார்: 

1) திவ்ய இரட்சகர், தமது மகிமைமிக்க உத்தானத்தால், பாவத்தளையினின்று நம்மை விடு வித்து, நம் ஜீவியத்தை சீர்படுத்தி, செப்பனிட்டு, உயர்த்தினார்"உத்தானமும் உயிரும் நானே" (அரு. 11:25) 2) 

2) நாம் உத்தம் கிறீஸ்துவர்களாக ஜீவிப்பதற்காக, தேவவரப்பிரசாதத்தை, நமது ஜீவியத்திற்கு அருளிச்செய்தார். ஏனெனில், நான் உயிரோடிருக்கிறேன். நீங்களும் உயிரோடிருப்பீர்கள்' (அரு. 14:19) 3) 

3) மகிமையினுடைய ஜீவியத்தை ஆண்டவர் நமக்கு அருளினார். "நான் அவைகளுக்கு நித்திய ஜீவியத்தைக் கொடுக்கிறேன்" (அரு. 10:28)


No comments:

Post a Comment