Tuesday, August 26, 2025

நிறைவேறிவரும் தீர்க்கத்தரிசனங்கள் - Introduction


உலகிற்கும், மனுக்குலத்திற்கும் அடுத்து வரும் தீமைகளையும், அதனால் வரும் தேவ நீதியின் தண்டனைகளையும் வேதாகமங்களில் காண்கிறோம்.  பழைய ஏற்பாட்டில் இசையாஸ் தீர்க்கத்தரிசியிலிருந்து, புதிய ஏற்பாட்டில் அர்ச். இராயப்பர், சின்னப்பர் ஆகிய அப்போஸ்தலர்களால் வெளிப்படுத்தப்பட்ட தீர்க்கத்தரிசனங்களையும், எச்சரிப்புகளையும் காணலாம்.  (காண்க: ஐதைPமோத்தேயு 4-3,42  ஐதைPமோ. 3-1-62  இராய. 3-3 போன்றவை)  அதே போன்று திருச்சபையின் வரலாற்றில் அவ்வப்போது அடுத்து வரும் கேடுகளை பரிசுத்த ஆன்மாக்கள் மூலமாக நமது மீட்பரும், தேவமாதாவும் முன்னறிவித்து எச்சரித்து வருவதை அறிவோம்.  அவற்றுள் மிகவும் கடுமையானதும், திகைக்க வைப்பதுமானவை 16-ம் நுரற்றாண்டைச் சேர்ந்த வண. மரியன்னா தாயாருக்கு நமதாண்டவரும், மாதாவும் வெளிப்படுத்திய தீர்க்கத்தரிசனங்களாகும். நாம் வாழும் இக்காலத்தில் உலகிலும், சத்திய திருச்சபையிலும் நிகழ்ந்து வரும் கடவுள் மறுப்பு, தேவ அவசங்கைகள், நவீனத்தால் திருவழிப்பாட்டில், குருத்துவத்தில் - துறவற வாழ்வில் - கிறீஸ்தவ வாழ்வில் ஏற்பட்டு வரும் அலங்கோலங்களும், நாசமும், அதனால் ஏற்படும் ஆன்ம இழப்புகளும் 350 ஆண்டுகளுக்கு முன்பே இக்கன்னிகைக்கு அறிவிக்கப்பட்டன!!  அவைகளுக்காக தன்னையே பலியாக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள். விசுவாசிகள் இந்த தீர்க்கத்தரி சனங்களை அறிந்து கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும்.  விசுவாசத்தில் இன்னும் உறுதிப்பட்டு திருச்சபைக்காக ஜெபிக்கத் தூண்டும் - ஆசிரியர்.

No comments:

Post a Comment