Saturday, July 5, 2025

அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் - நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -2


நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -2


என் தெய்வீக அரசரே, என் அன்பிற்குரிய மீட்பரே, வாரும். இந்நாள் முதல் நீர் மட்டுமே என் ஆன்மாவில் அரசாள்வீராக; நீர் சித்தங்கொள்வதைத் தவிர வேறு எதையும் நான் ஆசிக்காமலும், விரும்பாமலும் இருக்கும்படியாக, என் சித்தத்தை முழுவதும் உமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும். எனக்கு நேரிடும் எக்காரியத்திலும், "என் தேவனே, நீர் சித்தங் கொள்வதையே நானும் சித்தங்கொள்கிறேன். உமது சித்தம் என்னில் எப்போதும் செய்யப்படுவதாக" என்றே நான் எப்போதும் சொல்வேன்! உம்முடைய சித்தம் செய்யப் படுவதாக!

நம் நன்மையைத் தவிர வேறு எதை ஆண்டவர் சித்தங் கொள்கிறார்? "நீங்கள் அர்ச்சியசிஷ்டவர்களாக வேண்டுமென்பதே சர்வேசுரனுடைய சித்தம்" (1தெச.4:3). இவ்வாழ்வில் திருப்தியோடும், மறு வாழ்வில் மகிழ்ச்சியோடும் இருப்பதன் மூலம் நாம் புனிதர்களாக இருப்பதைக் காணவே அவர் விரும்புகிறார். கடவுளிடமிருந்து நமக்கு வரும் எல்லாச் சிலுவைகளும் நமக்கு "நன்மைக்கு ஏதுவாக உதவுகின்றன" (உரோ.8:28) என்பதை நாம் புரிந்து கொள்வோமாக.

 இவ்வாழ்வில் நமக்கு வரும் தண்டனை களும் கூட நம் அழிவுக்காக அல்ல, மாறாக, நாம் நம்மைத் திருத்திக் கொண்டு, நித்தியப் பேரின்பத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமக்கு அனுப்பப்படுகின்றன: "தேவன்... நம்மைத் தண்டிக்கிற தண்டனைகள் நம்மை அழிப்பதற்கல்ல, நம்மைச் சீர்ப்படுத்துவதற்கே நேரிட்டிருக்கின்றன என்று எண்ணிக்கொள்ளக் கடவோம்" (யூதித்.8:27). 

கடவுள் எவ்வளவாக நம்மை நேசிக்கிறார் என்றால், நம்மில் ஒவ்வொருவருடைய இரட்சணியத்தையும் அவர் விரும்புவது மட்டுமல்ல, மாறாக அதை அவர் ஏக்கத்தோடு ஆசித்துத் தேடுகிறார். "ஆண்டவர் என்மேல் கருத்தாயிருக் கிறார்" (சங். 39:16). "தமது சொந்தக் குமாரன் மேல் முதலாய் இரக்க மில்லாமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் அவரோடு நமக்குத் தானம் பண்ணாதிருப்ப தெப்படி?" (உரோ.8:32). 

ஆகவே, நாம் இவ்வாழ்வில் இருக்கையில், நம் நன்மையை மட்டுமே எப்போதும் ஆசிக்கிறவராகிய சர்வேசுரனின் திருக்கரங்களில் நம்மை எப்போதும் கையளித்து விடுவோமாக. "அவர் உங்களை விசாரிக்கிறவராகையால், அவர் மேல் உங்கள் சகல கவலைகளையும் வைத்துவிடுங்கள்" (1 இரா.5:7). நமதாண்டவர் அர்ச். சியென்னா கத்தரீனம்மாளிடம்: "என்னை நினைத்துக் கொள்; நான் எப்போதும் உன்னை நினைத்துக் கொள்வேன்" என்றார். புனித மணவாளியோடு சேர்ந்து, "நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்" (உந்.சங்.6:2) என்று சொல்வோம். என் நேசர் எனக்கு எது நல்லது என்று சிந்திக்கிறார்

அவரைப் பிரியப்படுத்துவது பற்றியும், அவருடைய திருச்சித்தத்தோடு என்னையே இணைத்துக் கொள்வது பற்றியும் மட்டுமே நான் சிந்திப்பேன். மேலும் மடாதிபதி நீலஸ் கூறுவது போல, நாம் விரும்புவதைக் கடவுள் செய்ய வேண்டுமென்று ஒருபோதும் நாம் ஜெபிக்கக் கூடாது. மாறாக, அவர் சித்தங் கொள்வதையே நாம் செய்ய அருளும்படியே நாம் ஜெபிக்க வேண்டும்.

இதை எப்போதும் செய்கிறவன் மகிழ்ச்சியாக வாழ்வான், பாக்கியமான மரணத்தை அடைவான்; தேவ சித்தத்திற்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்தவனாய் மரிக்கிறவன், தனது இரட்சணியத்தைப் பற்றிய தார்மீக உறுதியுடன் புறப்பட்டுச் செல்கிறான்.

தியானச் சிந்தனை 

ஓ சேசுவே, என் மீட்பரே, நீரே என் இரட்சணியத்தின் காரணராக இருக்கும்படியாக, கடும் அவஸ்தையில் சிலுவையின் மீது உமது உயிரைக் கையளித்தீர்; ஆகவே என் மீது இரக்கமாயிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளும்; இத்தகைய சுடும் வாதையிலும், இத்தகைய பேரன்போடும் நீர் மீட்டு இரட்சித்த ஓர் ஆன்மா நரகத்தில் என்றென்றும் உம்மை வெறுத்துப் பகைக்க அதை அனுமதியாதிரும். 

உம்மை நான் நேசிக்கச் செய்வதற்கு, இது வரை நீர் செய்துள்ளதற்கு மேலாய் உம்மால் எதுவும் செய்ய முடியாது. கல்வாரியில் தேவரீர் மரிக்கும்போது, "எல்லாம் முடிந்தது" (அரு.19:30) என்ற நேச வார்த்தைகளை நீர் உச்சரித்தபோது, இதை நான் புரிந்துகொள்ளச் செய்தீர். ஆனால் உமது அன்பை நான் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்? கடந்த காலத்தில் உம்மைத் துன்புறுத்தியதையும், என்னை வெறுக்கும்படி உம்மைத் தூண்டியதையும் தவிர நான் வேறொன்றும் செய்யவில்லை என்று உண்மையாகவே நான் சொல்லக்கூடும். இவ்வளவு அதிகப் பொறுமையுடன் என்னைப் பொறுத்துக் கொண்டதற்காகவும், இப்போது என் நன்றியற்றதனத்திற்குப் பரிகாரம் செய்யவும். நான் இறப்பதற்கு முன் உம்மை நேசிக்கவும் எனக்குக் காலம் கொடுத்திருப்பதற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 

என் சித்தத்தையும், என் சுதந்திரத்தையும், என்னிடமுள்ள அனைத்தையும் நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். இந்தக் கணத்திலிருந்து என் வாழ்வை உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறேன், நீர் எனக்கு அனுப்ப இருக்கும் மரணத்தை, அதைச் சேர்ந்த சகல வேதனைகள் மற்றும் சூழ்நிலைகளோடு நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த என்னுடைய பலியை, என் சேசுவே, சிலுவையின் மீது நீர் எனக்காக ஒப்புக் கொடுத்த அந்த மாபெரும் பலியோடு ஒன்றிக்கிறேன். உமது திருச் சித்தத்தை நிறைவேற்றும்படி மரிக்க நான் ஆசையாயிருக்கிறேன். உமது திருப்பாடுகளின் பேறுபலன்களைப் பார்த்து, உமது தேவ பராமரிப்புக்கு என்னை அர்ப்பணித்து எப்போதும் வாழும். வரத்தை எனக்குத் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன்; மரணம் வரும்போது, உமது நல்ல விருப்பப்படி அதே அமைந்த மனதுடன் நான் அதைத் தழுவிக் கொள்ள வரமருளும். என் சேசுவே, உம்மை மகிழ்விக்கும்படி மரணமடைய நான் விரும்புகிறேன். "உமது சித்தம் செய்யப்படுவதாக" என்று கூறியபடி சாக நான் ஆசிக்கிறேன். நீர் இவ்வாறுதான் மரித்தீர். 

பரிசுத்த மரியாயே, என் மாதாவே. நானும் அப்படியே இறக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத்தாரும்.

அர்ச் சூசையப்பரே உம்மைப் நாங்களும் நன்மரணம் மரிக்க உம் திருக் குமாரனிடம் மன்றாடும் 


ஆமென் 


அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் - நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -1

 அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் 

நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -1


ஏதாவது ஒரு சிலுவையை அனுபவித்துத் துன்புறுவதையும், அதை அரவணைத்துக் கொள்வதன் மூலம் கடவுளைப் பிரியப் படுத்துகிறோம் என்று அறிவதையும் விடப் பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? கடவுளின் திருச்சித்தபபடி தனக்கு வந்த எந்தத் துன்பத்திலும் அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் எத்தகைய ஆறுதலை உணர்ந்தாள் என்றால், தேவசிநேகத்தின் பரவச நிலை ஒன்றில் ஆழ்ந்து விடுவது அவளுக்கு வழக்கமாக இருந்தது.

கடவுளின் சித்தத்தோடு இணைந்திருப்பவன், இவ்வுலகிலும் கூட. ஓர் இடைவிடாத சமாதானத்தை அனுபவித்து மகிழ்கிறான்: "நீதிமானுக்கு என்ன நேரிட்டாலும், அது அவனைக் கஸ்திப்படுத்தாது" (பழ.12:21); இது அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஓர் ஆன்மா தனது ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறுவதைக் காண்பதை விட அதிக உத்தமமான மனநிறைவைக் கொண்டிருக்கவே முடியாது; கடவுள் சித்தங் கொள்வதைத் தவிர வேறு எதையும் விரும்பாதிருப்பவன், தான் விரும்பும் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறான், ஏனெனில் எது நிகழ்ந்தாலும், அது கடவுளின் சித்தத்தாலேயே நிகழ்வதாக இருக்கிறது. 

அமைந்த மனதுள்ள ஆன்மாக்கள் ஓர் அவமானத்தைப் பெறும்போது. அதை அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.

அவர்கள் வறுமையால் துன்புறும்போது, தாங்கள் ஏழைகளாயிருக்க விரும்புகிறார்கள்; சுருங்கச் சொன்னால், நிகழ்வது எதுவாயினும் அதை அவர்கள் விரும்புகிறார்கள், ஆகவே அவர்கள் மகிழ்ச்சியான வாழ்வு நடத்துகிறார்கள். காலநிலை குளிராக அலலது வெப்பமாக இருந்தாலும், மழை அல்லது புயல் வந்தாலும், கடவுளின் சித்தத்தோடு இணைந்திருப்பவன், "நான் இந்தக் குளிரை அல்லது வெப்பத்தை (இதுபோன்ற எதையும்) விரும்புகிறேன், ஏனெனில் கடவுள் இதை சித்தங்கொள்கிறார்" என்று சொல்கிறான்.

 நட்டமோ. கலாபனையோ, நோயோ, மரணமோ வந்தால், அவன் அப்போதும், "நான் ஏழையாக, துன்புறுத்தப்படுபவனாக, நோயாளியாக, அல்லது மரிக்கிறவனாகக் கூட இருக்க விரும்புகிறேன், ஏனெனில் இதுவே கடவுளின் சித்தமாக இருக்கிறது" என்கிறான். தேவ சித்தத்தில் தங்கி யிருப்பவனும், கடவுள் எதைச் செய்தாலும் அதைப் பற்றி இன்பம் காண்பவனுமாகிய மனிதன் மேகங்களுக்கு மேலாக வைக்கப்பட்டு, கீழே கடும்புயல்கள் சுழன்றடிப்பதைக் கண்டாலும், அவற்றால் காயப்படுத்தப்படாமலும், கலக்கமடையாமலும் இருக்கும் மனிதனைப் போல் இருக்கிறான்.

 புத்தியெல்லாம் கடந்தது (பிலிப்.4:7) என்று அப்போஸ்தலர் கூறும் சமாதானம் இதுவே. இந்த சமாதானம் உலக இன்பங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது, எந்த மாற்றத்தையும் அனுமதிக்காத அளவுக்கு இது நிலையான உறுதி கொண்டதாக இருக்கிறது. "பரிசுத்தனான மனிதன் சூரியனைப் போல் மாறாமல் ஞானத்தில் நிலைக் கிறான். மூடனோ சந்திரனைப் போல் மாறுபடுகிறான்" (சர்வப்.27:12). மூடன், அதாவது பாவி சந்திரனைப் போல மாறுகிறான், அது இன்று வளர்கிறது, நாளை தேய்கிறது; ஒரு நாள் அவன் சிரிக்கிறான், மறு நாள் அழுகிறான்; ஒரு சமயம் அவன் மென்மையாகவும், கலகலப்பாகவும் இருக்கிறான். மற்றொரு சமயம் வன்மையாகவும், வருத்தமுள்ளவனாகவும் ஆகிறான்; ஏனெனில் தனக்கு நேரிடும் இன்ப, துன்பங்களுக்கு ஏற்றபடி அவன் மாறுகிறான். 

ஆனால் நீதிமானோ சூரியனைப் போலத் தனது மன அமைதியில், என்ன நிகழ்ந்தாலும் மாறாமலும், ஒரே சீராகவும் இருக்கிறான்; ஏனெனில் தேவ சித்தத்திற்கு ஒத்திருப்பதில் அவனது சமாதானம் தங்கியிருக்கிறது. "பூலோகத்திலே நல்ல மனதுள்ள மனிதர்களுக்கு சமாதானம் உண்டாகக் கடவது" (லூக்.2:14). ஒரு தீமையை அல்லது துன்பத்தை நாம் எதிர்கொள்ளும்போது, நம் ஆன்மாக்களின் கீழான பகுதியில் ஒரு கொடுக்கின் வேதனையை உணர்வதை நாம் தவிர்க்க முடியாதுதான்; ஆயினும், நம் சித்தம் கடவுளின் சித்தத்தோடு இணைந்திருக்கும்போது, நம் ஆன்மாக்களின் மேலான பாகத்தில் எப்போதும் சமாதானம் அரசாளும்; "உங்கள் சந்தோஷத்தை எந்த மனிதனும் உங்களிட மிருந்து எடுத்து விட மாட்டான்" (அரு.16:22). கடவுள் நியமிப்பது எப்படியும் நிறைவேறியே தீரும் என்ற நிலையில், அவரது திருச்சித்தத்தை எதிர்த்து நிற்பவர்கள் எவ்வளவு மூடத் தனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்! "அவரது திருச்சித்தத்தை எதிர்ப்பவன் யார்?" (உரோ.9:19). ஆகவே இந்தப் பரிதாபத் திற்குரிய சிருஷ்டிகள் சிலுவையைச் சுமக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் ஆயினும் எந்த பலனுமின்றியும், சமாதான மின்றியும் அதைச் சுமக்கிறார்கள்: "அவருக்கு விரோதமாய் நிற்கிறவன் ஒருக்காலம் அமரிக்கையாய் வாழமாட்டான்" (. 9:4).


ஆமென் 



Thursday, February 27, 2025

St. Gabriel of Our Lady of Sorrows (1838–1862)

 

பிப். 27 - வியாகுலமாதாவின்அர்ச்‌. கபிரியேல்

(இளைஞர்களின்‌ பாதுகாவலரான அர்ச்சிஷ்டவர்‌)

 

இவர்‌, இத்தாலியிலுள்ள ஸ்பொலேட்டோ நகர உச்ச நீதிமன்றத்தின்‌ நீதிபதியின்‌ பதிமூன்று பிள்ளைகளில்‌,11வது மகனாகப்‌ பிறந்தார்‌. இவருடைய ஞானஸ்நானப்பெயர்‌, பிரான்சிஸ்கோ பொஸந்தி. 1838ம்‌ வருடம்‌ பிறந்தார்‌. 600 வருடங்களுக்கு முன்‌ அர்ச்‌.பிரான்சிஸ்‌ அசிசியாருக்கு ஞானஸ்நானம்‌ அளிக்கப்பட்ட அதே ஞானஸ்நானத்‌ தொட்டியில்‌ இவருக்கும்‌ ஞானஸ்நானம்‌ அளிக்கப்பட்டது.

இவருடைய குழந்தைப்‌ பருவத்தில்‌ இவருக்கு வியாதி வந்த சமயத்தில்‌ அந்த வியாதி குணமடைந்தால்‌, இவர்‌ துறவற மடத்தில்‌ சேர்வதாக வாக்குறுதி கொடுத்தார்‌.இவ்விதம்‌, இருமுறை நேர்ந்தது. மற்ற அநேகரைப்போல்‌, இவரும்‌ அந்த வாக்குறுதியை பின்னர்‌ மறந்துவிட்‌டார்‌.

1856ம்‌ வருடம்‌,ஸ்பொலேட்டோ நகர மக்கள்‌, மகா பரிசுத்த வியாகுல மாதாவினுடைய மிகப்‌ பழமையான படத்தை, மிக ஆடம்பரத்துடன்‌ சுற்றுப்பிரகாரமாக, நகரம்‌ முழுவதும்‌ கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தனர்‌; தங்கள்‌ நகரத்தை காலரா கொள்ளை நோயிலிருந்து புதுமையாகக்‌ காப்பாற்றியதற்கு மகா பரிசுத்த தேவமாதாவிற்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்‌ செலுத்தும்படியாக, சுற்றுப்பிரகாரமாக எடுத்துச்‌ சென்றார்கள்‌; மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அற்புதப்‌படம்‌, சுற்றுப்‌ பிரகாரத்தில்‌, கடந்து சென்ற போது, பிரான்சிஸ்கோ, மற்ற மக்களுடன்‌ சேர்ந்து, முழங் காலிலிருந்து, மகா பரிசுத்த தேவமாதாவை நோக்கிப்‌ பார்த்தார்‌; அச்சமயம்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அற்புதப்‌ படம்‌, அவரை உற்று நோக்கிப்‌ பார்த்து, “பிரான்சிஸ்கோ, நீ ஏன்‌ உலகத்தில்‌ நேரத்தை வீணாக்குகிறாய்‌? எழுந்திரு! ஒரு துறவியாகும்படி, துரிதமாக விரைந்து செல்‌!” என்று கண்டிப்புடன்‌ கூறுவதைக்‌ கேட்டார்‌.

 மகா பரிசுத்த தேவமாதாவின்‌ கட்டளைக்கு, பிரான்சிஸ்கோ உடனே கீழ்ப்படிந்தார்‌; ஆண்டவரின்‌ திருப்பாடுகளின்‌ சபையில்‌ சேர்ந்து துறவியானார்‌. அத்துறவற சபையில்‌ வார்த்தைப்பாடுகள்‌ கொடுத்த போது, “வியாகுலமாதாவின்‌ கபிரியேல்”‌ என்கிற  பெயரை, தன்‌ துறவற சபைப்பெயராக, வைத்துக்கொண்டார்‌. மகா பரிசுத்த வியாகுல மாதாவின்‌ மீதான பக்தியைப்‌ பரப்புவதாக, விசேஷ வாக்குறுதி அளித்தார்‌. இவர்‌ எழுதிய நூல்கள்‌ யாவும்‌, மகா பரிசுத்த வியாகுல மாதாவின்‌ மீது பக்தியையும்‌, நமதாண்டவரின்‌ திவ்ய பாடுகளின்‌ மீது பக்தியையும்‌, வாசிப்பவர்களின்‌ இருதயங்களில்‌ ஆழமாகப்‌ பதிய வைப்பவையாக திகழ்ந்தன!  ஆண்டவருடைய திருப்பாடுகளின்‌ துறவற சபை ஒழுங்கு விதிமுறைகளை நுட்பமாக அனுசரிப்பதில்‌, இவர்‌ தன்னிகரற்றவராக விளங்கினார்‌. மிக சிறிய வயதிலேயே இவருக்குக்‌ காசநோய்‌ வந்தது. இருப்பினும்‌, அதே ஞான சந்தோஷத்துடனும்‌ முகமலர்ச்சியுடனும்‌, சரீர வேதனைகளின்‌ மத்தியிலும்‌, இவர்‌ அனுசரித்த கடின தபசுகளையும்‌ ஒறுத்தல் களையும்‌, தொடர்ந்து தவறாமல்‌ அனுசரித்து வந்‌தார்‌. 

இவர்‌ குருப்பட்டம்‌ பெறுவதற்கு முன்னதாக, தனது 24வது வயதில்‌, மகா பரிசுத்த வியாகுல மாதாவின்‌ பரிசுத்தப்‌ படத்தை அரவ ணைத்தபடியே பாக்கியமாய்‌ மரித்தார்‌. 15ம்‌ ஆசீர்வாதப்பர்‌ பாப்பரசர்‌, இவருக்கு 1920ம்‌ வருடம்‌ அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளித்தார்‌. திருச்சபையின்‌ இளைஞர்களுக்குப்‌ பாதுகாவலராக, இவர், பாப்பரசரால்‌ பிரகடனம்‌ செய்யப்பட்டார்‌. குருமாணவர்களும்‌, நவசந்நியாசிகளும்‌, இவரைத்‌ தங்கள்‌ பாதுகாவலராகக்‌ கொண்டிருக்கின்றனர்‌. இவருடைய பரிந்துரையினாலேயே தான்‌, ஆண்டவருடைய திருப்பாடுகளின்‌ துறவற கன்னியர்‌ சபையில்‌ சேரும்படியாக, தனக்கு வந்த வியாதி, புதுமையாகக் குணமடைந்தது! என்று அர்ச்‌. ஜெம்மா கல்கானி கூறியிருக்கின்றார்‌.

 “என்‌ இருதயத்திலுள்ள எந்த தசைநாராவது, சர்வேசுரனுடைய சிநேகத்திற்காகத்‌ துடிக்கவில்லையென்றால்‌, தாமதமில்லாமல்‌ அதை பிடுங்கி நசுக்கி அழித்துப்போடுவேன்!”‌--அர்ச்‌. வியாகுல மாதாவின்‌ கபிரியேல்‌.

 பழமையான வியாகுலமாதாவின்‌ அற்புதப்படத்தை, கி.பி.1115ம்‌ வருடம்‌, பார்பரோஸா என்ற சக்கரவர்த்தி ஸ்பொலோட்டோ நக ரத்திற்கு அன்பளிப்பாகக்‌ கொடுத்திருந்தார்‌.

அர்ச்‌. வியாகுலமாதாவின்‌ கபிரியேலே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்‌!


Early Life (1838–1856)

  • March 1, 1838 – Born as Francesco Possenti in Assisi, Italy.
  • 1841 – His family moves to Spoleto, Italy.
  • 1842 – His mother passes away when he is four years old.
  • 1851–1856 – Attends the Jesuit College in Spoleto. He is known for being intelligent, fashionable, and socially active.
  • 1854 – Contracts a serious illness and promises to dedicate his life to God if he recovers.
  • 1856 – During a Marian procession in Spoleto, he feels called by the Virgin Mary to join religious life.

Religious Life (1856–1862)

  • September 1856 – Enters the Passionist Order in Morrovalle, taking the name Gabriel of Our Lady of Sorrows.
  • 1857 – Moves to the Passionist monastery in Pietrocinio, deepening his devotion to the Passion of Christ and the Virgin Mary.
  • 1858–1861 – Excels in his studies, practices extreme humility, obedience, and self-denial.
  • 1861 – Contracts tuberculosis but remains joyful and devout despite suffering.

Death and Canonization

  • February 27, 1862 – Dies at age 24 in Isola del Gran Sasso, Italy.
  • 1892 – His body is exhumed and found incorrupt.
  • 1908 – Beatified by Pope Pius X.
  • 1920Canonized as a saint by Pope Benedict XV.
  • 1959 – Declared the Patron Saint of Catholic Youth, Students, and Clerics.

His legacy continues through the Passionist Order, where he is a model of holiness, devotion to Our Lady, and love for Christ’s Passion.


St. #Gabriel of Our Lady of Sorrows (1838–1862)

Wednesday, February 26, 2025

பிரிவினைவாதியும் இல்லை, சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவரும் இல்லை

 

ஸ்கிஸ்மாடிக் அல்லது வெளியேற்றப்பட்டவர் அல்ல - அறிமுகம்

மூலம்:  FSSPX செய்திகள்





FSSPX.News வலைத்தளம் 1988 ஆம் ஆண்டு வெளியான ஒரு கட்டுரையை மீண்டும் இங்கே தருகிறது. அதைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டதால், ஒரு புதிய விளக்கக்காட்சிக்கு தகுதியானது. இந்த ஆய்வு - முதலில் Sì sì no no , தொகுதி XXII, எண். 95 (285) இதழிலும், Courrier de Rome , எண். 285, செப்டம்பர் 1988 இல் வெளியிடப்பட்டது - 1988 ஆம் ஆண்டின் ஆயர் அபிஷேகம்  விளக்க அர்ச்.  பத்தாம் பத்திநாதர் சங்கம் (SSPX) நம்பியிருக்கும் கணிசமான வாதங்களை உருவாக்குகிறது. அடுத்தடுத்த பகுதிகளில் வரும் ஆங்கில மொழி பதிப்பு SSPX இன் US மாவட்ட வலைத்தளத்திலும், பாரம்பரியம் வெளியேற்றப்பட்டதா? (Angelus Press) என்ற புத்தகத்திலும் வெளியிடப்பட்டது.

இந்தக் கட்டுரையை நன்கு புரிந்துகொள்ள, பொதுவான வாதத்தின் சுருக்கமான சுருக்கம் இங்கே.

திருச்சபைக்குள் அதிகரித்து வரும் குழப்பமான இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின், கோட்பாடு, ஒழுக்கம் மற்றும் வழிபாட்டு முறையை ஆழமாகப் பாதிக்கிறது, இது விசுவாசிகளை அவர்களின் நம்பிக்கைக்கும் படிநிலையால் விதிக்கப்பட்ட புதிய திருச்சபை நோக்குநிலைகளுக்குக் விசுவாசத்துக்கும் கீழ்ப்படிதலுக்கும் இடையில் கிழித்து வருவதைக் குறிப்பிடுவதன் மூலம் ஆய்வு தொடங்குகிறது.

இந்தப் பொதுவான தோல்வியை எதிர்கொண்டு, தங்கள் விசுவாசத்தை நிலைநிறுத்த விரும்புவோர் ஒரு தேர்வைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்: மனிதர்களை விட கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இது சட்டபூர்வமான அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதிலிருந்து அல்ல, மாறாக திருச்சபையின் தலைவரான கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருப்பதன் மூலம் வருகிறது, அவருடைய திருச்சபையின் தலைவராக போப் மட்டுமே உள்ளார்.

ஏனென்றால், ஐயோ, போப் கிறிஸ்துவின் முடிவுகளிலிருந்து வேறுபட்ட முடிவுகளையோ அல்லது நோக்குநிலைகளையோ எடுப்பது நடக்கலாம். இது அதிகம் அறியப்படாத சாத்தியக்கூறு, ஆனால் திருச்சபையின் வரலாறு மீண்டும் மீண்டும் கண்டிருக்கிறது.

கிறிஸ்துவின் குருக்களின் செயல்பாடு, குறிப்பாக விசுவாசம், அரசாங்கம் மற்றும் ஒற்றுமை விஷயங்களில் திருச்சபையின் ஒற்றுமையை உறுதி செய்வதாகும். ஆனால் அவர் மிகவும் தனிப்பட்ட கருத்துக்கள் அல்லது கருத்துக்களைப் பின்பற்றுவதன் மூலம் தனது பணியைச் செய்யும்போது, ​​அவர் தனது செயல்பாட்டிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள நேரிடும்.

எனவே, அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துவதற்கும் தனிப்பட்ட முன்முயற்சிகளுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம். சமகால கிறிஸ்தவ மதத்தால் அச்சுறுத்தப்படும் விசுவாச ஒற்றுமையே அளவுகோலாகும். அதை ஒருபோதும் தியாகம் செய்ய முடியாது.

இந்தக் குழப்பமும் முரண்பாடுகளும் திருச்சபையில் ஒரு "அசாதாரண" சூழ்நிலையை உருவாக்குகின்றன, அங்கு விசுவாசத்தின் ஒற்றுமை இனி பொதுவாக உறுதி செய்யப்படாது. இது திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சிறப்புக் கடமைகளை உள்ளடக்கியது. விசுவாசிகள், தங்கள் பங்கிற்கு, ஒரு புனிதமான "மனசாட்சியின் ஆட்சேபனை" மூலம், அதன் தூய்மையில் தங்கள் விசுவாசத்தைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் அதை அழிக்கக்கூடிய அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.

ஆயர்களையும், குறிப்பாக ஆயர்களையும் பொறுத்தவரை, ஆன்மாக்களின் நன்மைக்காக அவர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தின் காரணமாக, விசுவாசத்தையும் ஒழுக்கத்தையும் பாதுகாக்கவும், தற்போதைய சூழ்நிலையில் விசுவாசிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழிகளை வழங்கவும் முடிந்ததைச் செய்ய அவர்கள் குறிப்பாகக் கடமைப்பட்டுள்ளனர். 

தவிர்க்க முடியாமல், இந்தக் கடமைகள் சாதாரண ஒழுக்கத்திற்கு முரணான செயல்களுக்கு வழிவகுக்கும், இருப்பினும் அவை தெய்வீக உரிமைக்கு எதிரானவை அல்ல. இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையில் ஒருவர் தன்னைக் காண்கிறார், அவற்றைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறும்படி கட்டாயப்படுத்தப்படலாம்.

இந்த ஆய்வு பின்னர் இந்த அவசிய நிலையின் யதார்த்தத்தை நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, பின்னர் 1988 ஆம் ஆண்டின் ஆயர் அபிஷேகம் போன்ற ஒரு செயலைக் கண்டுபிடித்து சட்டப்பூர்வமாக்க சட்டத்தால் வழங்கப்பட்ட நிபந்தனைகளை விரிவாக ஆராய்கிறது.

முடிவு என்னவென்றால், பிளவுகளால் திருச்சபை ஒற்றுமையை சமரசம் செய்வதற்குப் பதிலாக, இந்த அபிஷேகம் திருச்சபையின் நன்மைக்காக சட்டபூர்வமானவை, மேலும் எந்த சந்தர்ப்பத்திலும் அவை திருச்சபை நீக்கத்திற்கு தகுதியானவை அல்ல.


தொடர்புடைய கட்டுரைகள்

பிரிவினைவாதியும் இல்லை, சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவரும் இல்லை (1)

(மூலம்: Courrier de Rome/Sì sì no no – FSSPX.Actualités)

விளக்கம்: பொது டொமைன், விக்கிமீடியா காமன்ஸ்

Friday, February 18, 2022

சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூவகை அலுவல் : அர்ச். தாமஸ் அக்வீனாஸ்

 கிறீஸ்துமஸ் தினத்திற்கான பிரசங்கம் 

சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூவகை அலுவல் : அர்ச். தாமஸ் அக்வீனாஸ்

"அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது" (அரு. 1:4) அர்ச். அருளப்பர் தமது சுவிசே ஷத்தில், குழந்தையாகப் பிறந்தவரான திவ்ய சேசுநாதரை, வார்த்தையானவர் என்று அழைக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தார் (ஒளியும் ஜீவனுமாக இருந்தார்): அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது" இதிலிருந்து, ஆண்டவருடைய மனிதவதாரமானது, மனித ருக்கு மூன்று மடங்கான நன்மைகளை அளிக்கின்றது என்று நாம் அறியலாம்:


1.முதலாவதாக, மனுவுருவான திவ்ய சேசுநாதர்சுவாமி மனிதருக்கு போதிக்கும் வார்த்தையா னவராக விளங்கினார்-"சேசுநாதர், கலிலேயாநாடெங்கும் சுற்றிப்போய், போதித்து, சுவிசேஷத் தைப் பிரசங்கித்தார்” (மத். 4:23); 

ஆண்டவர் மூன்று காரியங்களை நமக்கு போதித்தார் : 

1) உலகிலுள்ள சகல காரியங்களின் தன்மைகளைப் பற்றி விளக்கும் இயற்பியலை கற்பித்தார்: ஆண்டவர், உலகின் மாயத்தன்மையைப் பற்றியும், பசாசின் தீமையைப் பற்றியும், சர்வேசுர னின் வேதசத்தியத்தைப் பற்றியும் போதித்த போது, உலகிலுள்ள சகலத்தினுடைய பண்பு கள் பற்றியே நமக்குக் கற்பித்துள்ளார். 

2) பரிசுத்த வேதாகமத்தினுடைய வேதசாத்தியங்களை போதித்த போது, ஆண்டவர், நமக்கு, உண்மையானதை நிரூபிக்கக்கூடிய காரணகாரியத்திற்கான தருக்கமுறையைகற்பித்தார்: "அப்பொழுது, வேத வாக்கியங்களை உணர்ந்து கொள்ளும் படியாக, அவர்களுடைய புத்தி யைத் தெளிவித்தார்" (லூக். 24:45) 

3)ஜீவியத்தின் பரிசுத்தத்தனத்தைப் பற்றி நமக்கு போதித்தபோது, ஆண்டவர், நல்ல பழக்க வழக்கங்களின் நன்னெறி ஒழுக்கவியலை நமக்குக் கற்பித்தார்: "சாந்த குணமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், தூய இருதயமுடையவர்கள் பாக்கியவான் கள்" (மத்.5:3-12)"நீங்கள் என்னை குருவென்றும், ஆண்டவரென்றும் அழைக்கிறீர்கள்; நீங்கள் சொல்வது சரியே. ஏனெனில், நான் அவர் தான்” (அரு.13:13) || 


இரண்டாவதாக, மனிதரை ஒளிர்விக்கும் ஒளியாக, திவ்ய சேசு விளங்குகிறார். நம் திவ்ய இரட்சகர் மூன்று வழிகளில், நம்மை ஒளிர்விக்கின்றார்: 

1) பாவத்தின் இரவை அகற்றியதன் மூலம் நம்மை ஒளிர்வித்தார். 

2) வரப்பிரசாதத்தின் நாளைக் கொண்டு வந்ததன் மூலம் நம்மை ஒளிர்வித்தார். "இரவு ஏற்கனவே சென்று போயிற்று; பகலோ சமீபமாயிற்று" (ரோமர் 13:13) 

3) உலகின் இருளை அகற்றும்படியாக, அர்ச்சிஷ்டவர்கள் என்னும் மாபெரும் ஒளிரும் விளக் குகளை, உலகம் முழுவதும் பரவச்செய்தார் - " கோணலும் மாறுபாடுள்ளதுமான ஜனத்தின் நடுவில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும், சர்வேசுரனுடைய நேர்மையான பிள்ளைகளாகவும், மாசற்றவர்களாகவும் இருப்பீர்கள்.. நீங்கள் அவர்கள் நடுவிலே, ஜீவ வாக்கியத்தைக் கையி லேந்திக் கொண்டு, உலகத்தில் சுடர்களைப்போல் பிரகாசிப்பீர்கள்" (பிலிப். 2:15-16) III. 


மூன்றாவதாக, நித்திய ஜீவியத்தை , திவ்ய சேசுநாதர் நமக்கு அருளினார்: 

1) திவ்ய இரட்சகர், தமது மகிமைமிக்க உத்தானத்தால், பாவத்தளையினின்று நம்மை விடு வித்து, நம் ஜீவியத்தை சீர்படுத்தி, செப்பனிட்டு, உயர்த்தினார்"உத்தானமும் உயிரும் நானே" (அரு. 11:25) 2) 

2) நாம் உத்தம் கிறீஸ்துவர்களாக ஜீவிப்பதற்காக, தேவவரப்பிரசாதத்தை, நமது ஜீவியத்திற்கு அருளிச்செய்தார். ஏனெனில், நான் உயிரோடிருக்கிறேன். நீங்களும் உயிரோடிருப்பீர்கள்' (அரு. 14:19) 3) 

3) மகிமையினுடைய ஜீவியத்தை ஆண்டவர் நமக்கு அருளினார். "நான் அவைகளுக்கு நித்திய ஜீவியத்தைக் கொடுக்கிறேன்" (அரு. 10:28)


மூன்று ஞானிகளும் அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகளும்

 மூன்று இராஜாக்கள் திருநாளுக்கான பிரசங்கம் மூன்று ஞானிகளும் அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகளும்

அர்ச். தாமஸ் அக்வீனாஸ் "தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னும், தூபவர்க்கமும், மீறையும் அவருக்குப் பாதகாணிக்கை வைத்தார்கள்" (மத்.2:11) இவ்வேதாகம் வாக்கியத்தை வாசிக்கும் போது, முதலாவதாக, மூன்று ஞானிகள் பற்றியும், இரண்டாவதாக, நமதாண்டவருக்கு, அவர்கள் ஒப்புக்கொடுத்த அவர்களுடைய காணிக் கைகள் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 1. இந்தக் காணிக்கைப் பொருட்களை, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த மூன்று அரசர்களும், ஞானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இன்றைய சுவிசேஷமானது, அவர்கள் பல வகை களிலும், ஞானமுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள் என்று நமக்கு உணர்த்துவதையே, நாம் முதல் முக்கிய கருத்தாகக் கொள்ள வேண்டும். யூதருடைய இராஜாவாகப்பிறந்திருக்கிறவர் எங்கே? என்று அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து, தர்க்க சாஸ்திரத்தில், அவர்கள் கொண் டிருந்த ஆழ்ந்த அறிவை கண்டுணரலாம். கீழ்த்திசையில், அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரை ஆராதிக்க வந்தோம் என்று கூறியதிலிருந்து, நட்சத்திரங்கள் பற்றிய அறிவில், அதாவது, வானசாஸ்திரத்தில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் அறியலாம். கணித சாஸ்திரத்திலும் அவர்கள் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தனர்; முதன்மையான தேவவரப் பிரசாதங்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காண்பிக்கும்படியாக, மூன்று காணிக்கைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஆண்டவருக்குப் பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர்.

கணித சாஸ்திரிகளான அவர்கள், அர்ச். தமதிரித்துவத்தைக் குறிக்கும் எண், மூன்றினு டைய மதிப்பை நன்கறிந்திருந்தனர். இசையின் முக்கியத்துவத்தையும் அறிந்திருந்தனர். இசை, தேவதோத்திரமாக இருப்பதாலும், ஆராதனையில், தேவ தோத்திரம் செலுத்தப்படுவ தாலும், மூன்று ஞானிகளும் தேவபாலனை ஆராதித்தார்கள். ஒழுக்கவியலில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்ததால், எவ்வாறு ஒருவன் தன்னையே தாழ்த்துவது என்பதை அறிந்திருப் பது, உண்மையிலேயே , நல்லொழுக்க அறிவாகும் என்பதால், கீழ்த்திசை இராஜாக்கள் மூவரும், சாஷ்டாங்கமாக, தேவபாலன் முன்பாக தென்டனிட்டு விழுந்து, அவரை ஆராதித்தனர். சர்வத்துக்கும் ஆதிமுதல் காரணராயிருக்கின்ற சர்வாதி கர்த்தராகிய சர்வே சுரனைப்பற்றி, அவர்கள் கொண்டிருந்த அறிவின் மூலமாக, நுண்பொருள் கோட்பாட்டியல் (Metaphysics) பற்றியும் அறிந்திருந்தனர். சர்வேசுரனுடைய தேவ இலட்சணங்கள் பற்றிய மூன்று காரியங்களை, அறிந்திருப்பதை, மூன்று ஞானிகளும், தாங்கள் ஒப்புக்கொடுத்த காணிக் கைப்பொருட்கள் வழியாக வெளிப்படுத்தினர்.

இரண்டாவதாக, அவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருட்கள் பற்றி பார்ப் போம். ஞானிகள், பிறக்கப்போகும் குழந்தை, முதலில், ஆதிகாரணர், அதாவது, சகலத்தை யும் சிருஷ்டித்த சிருஷ்டிகர் என்பதையும், இரண்டாவதாக தேவபாலன், சகலத்தையும் ஆண்டு நடத்துபவர் என்பதையும், மூன்றாவதாக, அவர் சகலத்தையும் புதுப்பிக்கிறவர் என்ப தையும் அறிந்திருந்தனர். அதிகாரத்தையும் வல்லமையையும் அடையாளமாக சுட்டிக்காண்பிக்கும், பொன்னைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததன் மூலம், தேவபாலன், சகலத்தினு டையவும் சிருஷ்டிகர் என்று, ஞானிகள் அறிவித்தனர். பொன், சர்வத்துக்கும் அதிபதியான அரச அதிகார வல்லமையின் முத்திரையாக திகழ்கிறது.

1) பொன் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

நமதாண்டவரது சிருஷ்டிக்கும் வல்லமையானது மூன்று விதமாகக் காண்பிக்கப்பட்டது.

முதலாவதாக, அவர் சிருஷ்டித்த விதத்தில், அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமையானது, வெளிப்படுத்தப்பட்டது: "அவர் வாக்கிடவே சகலமும் செய்யப்பட்டது" (சங்.32:9).

இரண்டாவதாக, சர்வேசுரன், உண்டாக்கியவற்றிலிருந்து, அவருடைய சிருஷ்டிக்கும் வல்ல மை வெளிப்பட்டது: "ஆண்டவருடைய கிரியைகள் மகத்தானவை ; அவற்றில் இன்பம் கொள்வோர் அவற்றை உய்த்துணர்வர்” (சங். 110:2).

மூன்றாவதாக, திவ்ய கர்த்தர், ஒன்றுமில் லாமையிலிருந்து சகலத்தையும் படைத்ததால், அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமை நமக்கு உணர்த்தப்படுகின்றது: "ஆதியிலே கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத் தார். பூமியோவெனில் உருவமற்றதும் வெறுமையுற்றதுமாயிருந்தது" (ஆதி. 1:1,2). 2)

மீரை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

மீரையை தேவபாலனுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததன் மூலமாக, ஆண்டவர் சகல காரியங்களையும் பாதுகாத்து ஆண்டு நடத்துபவர் என்பதை ஏற்று, உலகிற்கு அறிவிக்கின்ற னர்; ஏனெனில், மீரையானது, மாபெரும் பதப்படுத்தும் பொருள்; மற்ற பொருட்களை அழியா மல் பாதுகாக்கும் குணமுடையது. நமதாண்டவர், மூன்று விதமாக உலகத்தை ஆள்கின்றார்:

முதலாவதாக, பிரபஞ்சத்தின் சகலத்தையும் பாதுகாப்பதன் வழியாக, அதை ஆளுகின்றார். "சகலருக்கும் பொறுத்தலளிக்கிறீர்; ஏனெனில், ஆத்துமங்களை நேசிக்கும் கர்த்தாவே! சகல மும் உமக்கு சொந்தமாயிருக்கின்றன” (ஞான 11:27)

இரண்டாவதாக, உலகில் சகல உயிர்வாழ் பிராணிகளுக்கும் உணவளித்துப் பாதுகாத்து வரு வதன் மூலம், உலகத்தை சர்வேசுரன் ஆள்கின்றார்:"மாமிச தேகமுள்ள யாவருக்கும் ஆகாரம் கொடுத்தருளினார்" (சங். 135:25)

மூன்றாவதாக, ஒவ்வொரு மனிதனையும் போஷித்துப் பராமரித்துவருவதன்வழியாக, ஆண்ட வர் உலகத்தை ஆண்டு நடத்துகின்றார்: “தங்கள் தானியம் திராட்சப் பழம் எண்ணெய் இவைகளின் பலனால் அவர்கள் திருப்தியடைந்தார்கள்" (சங்.4:7) 3)

தூபம் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

தூபத்தை, தேவபாலனுக்குக் காணிக்கை யாக ஒப்புக்கொடுத்ததன் மூலமாக, ஞானிகள், ஆண்டவரை, சகலத்தையும் புதுப்பிக்கிற வர் என்பதை, அறிவிக்கின்றனர். தூபமானது சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கப் பட்டு வந் தது. ஆனால், அகில உலகத்தினுடைய பாவ நிவாரண பலியாக, கிறீஸ்துநாதர், சிலுவையில் தம்மையே சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தார். என் விண்ணப்பம் தீபதூபமாகவும். உமது சமூகத்தில் ஏறக்கடவது” (சங். 140:2). தூபத்தின் நறுமண சாம்பிராணிப் புகையானது, மூன்று காரியங்களை செய்கிறது.

முதலாவதாக, அது பசாசை ஓட்டுகிறது. மீனுடைய இருதயத்தின் ஒரு துண்டை நெருப்பில் போட்டால், அதிலிருந்து கிளம்பும் புகையானது, ஆண், பெண் அனைவரிடமும் உள்ள எவ்விதப் பேய்களையும் ஓட்டிவிடும். இனிமேல், அவை கிட்ட வராது' (தொபி.6:8).

இரண்டாவதாக, அது பாவிகளைத் தூய்மைப்படுத்துகிறது: "இவர் நம்மை சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவினார்" (காட்சி 1:5)

மூன்றாவதாக, அது உலகத்தை சர்வேசுரனுடன் ஒப்புரவாக்குகின்றது. "கிறீஸ்துநாதர் நமக்காகத் தம்மைச் சர்வேசுரனுக்குப் பரிமள வாசனையுள்ள காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்” (எபேசி 5:2)